“நான் கூட நம்பவே இல்ல!” — ஆனால், அந்த ஜோதிடர் சொன்னதெல்லாம் இப்போது நனவாகியுள்ளது என்றார் நடிகர் சிவக்குமார்.
சூர்யா திரையில் இன்று ஒரு தனி அடையாளமாக உயர்ந்திருக்கிறார். ஆனால் அந்த பயணம் ஒரு சாதாரண தொடக்கமில்லை. திரையுலகத்தின் சிறந்த நடிகர் சிவகுமாரின் மகனாக பிறந்தாலும், சூர்யா தனது வாழ்க்கையை சினிமாவின் துணை இல்லாமல் ஆரம்பித்தவர்.
இதை நினைவுகூர்ந்த சிவகுமார், சமீபத்தில் நடந்த ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டில் தனது மகன் பற்றி உருக்கமாக பேசினார். அவர் கூறியது:
“சூர்யாவுக்கு 17 வயது இருக்கும் போது ஒரு ஜோதிடர் எங்கள் வீட்டிற்கு வந்தார். சூர்யா, கார்த்தி இருவரின் ஜாதகத்தையும் பார்த்தார். சூர்யாவை பற்றி சொல்லும்போது, ‘இந்த பையன் முகத்தை வைத்து செய்யும் தொழிலில் மிகப்பெரியவர் ஆகுவார்’ என்றார்.”
அதை கேட்டதும், சிவகுமார் சிறிது அதிர்ச்சி:
“அவன் நடிகனா? லூசாய்யா?” என்று நான் கேட்டேன். அவன் நாளை விடி வரைக்கும் நாலு வார்த்தை சரியா பேச மாட்டான். அவன் நடிகர்?” என கேட்டப்படி சிரித்தார் சிவக்குமார்.
ஆனால் ஜோதிடர் விடாமல் சொன்னார்:
“அவர் உங்களை விட பிரபலமானவர் ஆவர். உங்களுக்கு மேல் விருதுகளை வாங்குவான். அதிகம் சம்பாதிப்பார்!” என்றார்.
சூர்யா கூட அந்தச் சமயத்தில், “நான் நடிகனாகப் போறேனா? அய்யோ சாமி!” என்று சிரித்ததாக கூறுகிறார் சிவகுமார்.
பி.காம் முடித்து ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்த சூர்யாக்கு நேருக்கு நேர் படம் திரும்பு முனையாக அமைந்தது. இன்று தனது தனித்துவமான நடிப்பு திறமையால், இந்திய திரையுலகில் ஒரு அழியாத ஆளுமையாக பாராட்டப்படுகிறார்.
Leave a Reply