அவதூறு பரப்பி பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்- கோவை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ணேஷ் சுப்பையன்

Spread the love

முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீதும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாமீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் நடவடிக்கை எடுக்க தவறினால் கழகத்தின் அனுமதிபெற்று மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று கோவை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ணேஷ் சுப்பையன் தெரிவித்தார்.

தமிழகத்தின் ஒப்பற்ற முதல்வரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் நற்பெயருக்கு கலங்கம் கற்ப்பிக்கும் விதமாக கடந்த 17 ஆம் தேதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட்டனர்.

அதை கண்டிக்கும் விதமாக அவதூறு பரப்பி பதிவு செய்தவர்கள்மீதும், அதன் துறை அமைச்சரான டி.ஆர்.பி.ராஜாமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்று கோவை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ணேஷ் சுப்பையன் தலைமையில், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், சசிக்குமார், கோவை மாநகர மாவட்ட செயலாளர் சக்திவேல், மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன். மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள், சுரேஷ், இளங்கோ உட்பட அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மண்டல அதிமுக தலைமை நிலைய செயலாளர் விக்ணேஷ் சுப்பையன் கூறியதாவது தற்பொழுது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும், கஞ்சா, பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் , அவற்றையெல்லாம் திசை திருப்பும் விதமாக முன்னாள் முதல்வரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் நன்மதிப்பிற்கு கலங்கம் ஏற்படும் விதமாக நாகரிகம் இல்லாமல் கேளிச்சித்திரத்தை திமுகவின் அதிகாரபூர்வ சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் கீழடி அகழ்வாராய்ச்சி கடந்த அதிமுக ஆட்சியில் கழக பொதுச்செயலாளர் அவர்களால், துவங்கப்பட்டது. இந்நிலையில் அவர்மீது கலங்கம் கற்ப்பிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியுள்ளனர். உடனடியாக இந்த பதிவை நீக்கவேண்டும் மேலும் இதுபோன்ற அவதூறு பரப்பியவர்கள்மீதும், துறைசார்ந்த திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாமீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று கோவை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ணேஷ் சுப்பையன் தெரிவித்தார்.