மதுரை அலங்காநல்லூர் அருகே வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் பாலாலயம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்வேலிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலாலய நிகழ்ச்சியை முன்னிட்டு கோவில் மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்பு பூர்ணா கதி நடைபெற்று கோபுர கலசத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கல்வேலிபட்டி மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டனர். கோவில் ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர் இளமதி உள்பட பணியாளர்கள் கிராம பெரியோர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply