தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதி களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இதனால் டிச.10லிருந்து 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக் காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இல்லை என்றும் வளிமண்டல சுழற்சியால் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்
கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
அரபிக்கடலில் புதிய காற்றழுத்தம் கோவை உட்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Leave a Reply