,

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி கையெழுத்து இயக்கம்

signature campaign
Spread the love

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோவை கிளை சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேல் ஆகிய நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனத்திற்கான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் உடனடியாக பணி நியமன நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று முதல் ஐந்தாம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.