,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கை – தமிழக அரசு உத்தரவு

TN collage addmission
Spread the love

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மீண்டும் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..
சமீபத்தில் நடந்த 2 சுற்று கலந்தாய்வு முடிவில் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் 5-ந் தேதி வரை TNGASA ​ இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 8-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வே​றொரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.