தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர். சா. பெருமாள்சாமி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். இவர், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் பெற்றோர்கள் தந்தை சா. பெருமாள்சாமி (94). தாயார் தங்கமணி. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாமிநாதனின் தாயார் தங்கமணி இறந்த நிலையில் தந்தை பெருமாள் சாமி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சமீப நாட்களாக கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை பெருமாள் சாமி உயிரிழந்தார்.
Leave a Reply