அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில் குழந்தைகள் தினவிழா
கோவை காட்டூர் அப்துல்கலாம் சிறப்பு பள்ளியில் இன்று நடந்தது. இதில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார்.
கோவையில் குழந்தைகள் தின விழா மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு
கோவை, நவ. 14- அப்துல்கலாம் இன்டர் நேஷனல் பவுண்டேஷன் சார்பில் குழந்தைகள் தினவிழா கோவை காட் டூர் அப்துல்கலாம் சிறப்பு பள்ளியில் இன்று நடந்தது. விழாவுக்கு, ஒருங்கிணைப்பாளர் ஜெயேந்திரா ராவணன் தலைமை தாங்கி னார். பள்ளி தாளாளர் டாக்டர் ஜெயபிரபா முன்னிலை வகித்தார். கோவை மாநகராட்சி ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டு, பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி பேசிய போது “குழந்தைகளின் உள்ளம், கள்ளம் கபடமற்றது. அவர்களுக்கு சிறந்த ஒழுக் கத்தையும், கல்வியையும் புகட்ட வேண்டும். நேரு. அப்துல்கலாம் போன்றோர் குழந்தைகளை மேம்படுத்தும் திட்டங் களை செயல்படுத்தினர். வருங்கால தலைமுறையி னர் இவர்களை போற்றி
பாதுகாக்க வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் கெம்பனூர் வாழை ம.பாபு வின் சமூக சேவையை பாராட்டி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் விருது வழங்கினார். ஆலம் விழுதுகள் அறக்கட்டளைத் தலை வர் மீனா ஜெயக்குமார். தொழிலதிபர் பிரபாகரன், ஆகியோர் வாழ்த்தி பேசினார். நிவேதா நன்றி கூறினார்.
Leave a Reply