நாள்கள் பழமையான 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை மாற்றும் வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி மசோதா 2025-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
புதிய மசோதாவின் முக்கிய நோக்கங்கள்:
-
பழைய மசோதாவில் உள்ள குழப்பங்களைத் துல்லியமாக நீக்குதல்
-
எளிமையான சொற்றொடர்கள், சரியான வரி விகிதங்கள்
-
தனிநபர் வரி செலுத்துவோர் மற்றும் MSME நிறுவனங்களுக்கு தெளிவான வழிகாட்டி
-
முந்தைய 4,000+ திருத்தங்களை உள்ளடக்கிய 5 லட்சம் வார்த்தைகளுக்குமேல் உள்ள சட்டத்தை சுமார் 50% எளிமைப்படுத்தும் வகையில் வடிவமைப்பு
“நியாயம், தெளிவு, சிக்கல் நீக்கம் – இதுதான் புதிய வருமான வரி மசோதாவின் மூன்று தளங்கள்” என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய மசோதாவால் ஏற்படும் பலன்கள்:
-
நடுத்தர வர்க்கத்திற்கு வரி சுமை குறைவு
-
செலவுக்கூடிய வருமானம் அதிகரிப்பு
-
நுகர்வு, சேமிப்பு, முதலீடு உயர்வு
-
சட்டபூர்வ குழப்பங்கள் குறைப்பு
-
தேவையற்ற வழக்குகள் தவிர்ப்பு



Leave a Reply