,

அதிக தொகுதிகள் பெற நிர்பந்திக்கும் கட்சிகளால் ஜனநாயகத்திற்கு ஆபத்தா ?

edappadi palaniswamy
Spread the love

ஆ.வெ.மாணிக்கவாசகம்

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள் ளது. தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. வரும் தோ்தலில் நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமை க்கப்பட உள்ளன. ஒரு கோடியே 5 லட்சம் தோ்தல் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 91 ேகாடியே 20 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்து எதிர் வரும் மக்களவை தேர் தலில் வாக்களிக்க 96 கோடியே 88 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதில் நாடுமுழுவதும் 2 கோடியே 53 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள். மேலும் ஆண் வாக்காளர் கள் 49 கோடியே 72 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 47 கோடியே 15 லட்சம் நபர்களும், மாற்றுத் திறனாளி களாக 88 லட்சத்து 35 ஆயிரம் பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48 லட்சத்து 44 ஆயிரம் பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரிந்து சென்ற கட்சிகள் தேர்தல் நெருங்க, நெருங்க திரும்பவும் வந்து கொண்டுள்ளனர். குடியரசு தலைவர் உரைக்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, 370 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி 400 அதிகமான இடங்களை கைப்பற்றும் என பெரும் நம்பிக்கையுடன் பேசியது, அக்கட்சியர் மத்தியில் பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
இண்டியா கூட்டணி
இண்டியா கூட்டணியை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அக்கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றது,பெரும் பல வீனத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என மம்தா பானர்ஜி அறிவித்தி ருப்பதும், பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்து களம் இறங்குவதும்,இண்டியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகி றது. என்றாலும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,இண்டியா கூட்டணியில் மம்தா பானர்ஜி தொடர்கிறார் என தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட் சியின் கருத்து கணிப்பு களில் இண்டியா கூட் டணிக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இக் கூட்டணிக்கு கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என நம்பிக்கை ஊட்டி உள்ளன அந்த கருத்துக்கணிப்புகள்.
திமுக கூட்டணி
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார் த்தைகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சி, தாங்கள் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே விருப்பமாக அமையும்.அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடு தலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்டவை கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளை காட்டிலும், கூடுதலாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றன. என்றாலும், பேச்சு வார்த்தை சமூகமாக நடைபெறுவதால் இந்த வார இறுதிக்குள், தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்படும் என கூறப்படு கிறது.
அதிமுக
அதிமுக தரப்பில், பாராளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்திருந்த போதிலும், அக்கட்சி கூட்டணியில் தற்போது வரை எஸ்டிபிஐ, பூவை ஜெகன்மூர்த்தி தலைமையிலானகட்சி ஆகியவையே அதிகாரப் பூர்வமாக இடம் பெற்றுள் ளன.
பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
2026 சட்ட மன்ற தேர்தல் தான் இலக்கு என அதிமுக இருப்பது போலத்தான்,தேமுதிகவும் அந்த எண்ண ஓட்டத்தில் இருப்பதாகவே தெரிகிறது.
அதனை உறுதிப் படுத்தும் வகையில் அண்மை யில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்,பேசியவர்கள் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, அதற்கு தகுந்தாற் போல அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற கருத்தும் பேசப்பட்டது.
தேர்தல் கூட்டணி குறித்து பாமக தலைவர் அன்புமணி கூறுகையில், பாமக அதிமுகவுடன் கூட்டணி தவறான செய்தி.
சில கட்சிகளோடு, தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.
பாரதிய ஜனதா
தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் பணிக ளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர்.
கட்சியின் தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” நடைபயணத் தில் நிறைவு விழா வரும் 25ஆம் தேதி பல்லடத்தில் பிரம்மாண்டமான முறை யில். நடைபெற உள்ளது.இந்த விழா உற்சாகத்தி னூடே,அதிமுக முன் னாள் சட்டமன்ற உறுப்பி னர்கள், முன்னாள் எம்பிக்கள் பாரதிய ஜனதா கட்சியில் டெல்லியில் சேர்ந்திருப்பதை பெரி தாக பேசி மகிழ்ந்து வரு கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே தற்போது வரை உறுதி செய்துள்ளது. மேலும் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருவதாக, அக் கட்சி நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர். அதிமுக, பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி வைக்க விரும்பும் பாமக, ஒவ்வொரு தேர்தலுக்கும் கடைபிடிக்கும் அதிக சீட் நிர்பந்தத்தையும் தற்போது கையில் எடுத்துள்ளது.
ஒரு ராஜ்யசபா சீட், இரண்டு இலக்க தொகுதி வேண்டும் என்ற நிலைப்பாடுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் கேட்பதை அளிக்க, அதிமுக, பாஜக கட்சி கள் கொடுப்பதற்கு முன்வர வில்லை என அக்கட்சியில் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதே பாணியை தான் தேமுதிகவும் கையாளுகிறது. அதிக எண்ணிக்கையான இடங்களை கொடுப் பவர்களுடன் கூட் டணி அமைத்து போட்டியிடப் படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஒரு ராஜ்யசபா சீட், 14 இடங்கள் வரை இக்கட்சி எதிர்பார்க்கிறது. ஏன் நிர்பந்தமாகவே அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடம் வைத்துள்ளது.தேமுதிகவின் வாக்கு வங்கியும் பெரிதாக இல்லை. கட்சித் தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத போதே,கட்சி பெரிதும் சரிவை சந்தித்தது.
தற்பொழுது அவர் மறைவுக்குப் பின், தேமுதிக காண செல்வாக்கு மேலும் குறைந்துள்ளதாக. அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தேர் தலுக்குத் தேர்தல் நிர்பந்தப்படுத்தி தங்களின் தேவைக்கான இடங்களைப் பெறும் அரசியல் கட்சிகளை, கூட்டணி தலைமை ஏற்கும் கட்சி, முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதே பொதுவான பார்வை. சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் கட்சிகளை பொதுமக்களும் விரும்பு வதில்லை. தன்னலமற்ற சேவை செய்பவரையே அனைவரும் விரும்பி ஏற்பர் என்பதே கடந்த கால அரசியல் வரலாறு.
அதை உணர்ந்து அரசி யல் கட்சிகள் செயல்பட முன் வருவார்கள் என நம்புவோம்.