முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர் . நலத்திட்ட உதவிகள் வழங்குவது , ரத்ததானம் வழங்குவது , ஆதரவற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கவுசல்யா பெண்களின் பாதுகாப்புக்கு பெப்பர் ஸ்பிரே கொடுத்து வ்பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது
மேலும் இது குறித்து நிர்வாகி கவுசல்யா , செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேகர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது மேலும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக இருந்த போது அண்ணாமலை அந்த பெண்ணுக்காக தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்டு தன்னை வருத்திக் கொண்டார்
மேலும் தமிழகத்தில்
பெண்களை பாதுகாப்பாக இருக்க அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார் ஆகவே பெண்கள தற்பாதுகாப்புக்காக பயன்படுத்தும் வகையில் அண்ணாமலை அவர்களின் பிறந்த நாளன்று பெப்பர் ஸ்ப்ரே கொடுத்து உள்ளோம் என தெரிவித்தார்
Leave a Reply