பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படைத் தளங்களை துவம்சம் செய்தன. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து வந்தது. இப்போது, அந்த நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், தன் வாயாலேயே செம அடி விழுந்ததை ஒப்புப் கொண்டுள்ளார்.
அவர் பேசியதாக வீடியோ ஒன்றை பாஜக ஐ.டி விங் பரப்பி வருகிறது. அந்த வீடியோவில் அவர், இந்திய போர் விமானங்கள் ராவல்பிண்டியிலுள்ள நுர்கான் விமானப்படைத் தளங்களை தாக்கி அழித்தாகவும் 10ம் தேதி இரவு 2.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆஷிம் முனீர் என்னை கூப்பிட்டார். அப்போது, நுர்கான் உள்பட பல விமானத் தளங்கள் தாக்கப்பட்டுள்ள. இது சற்று கவலைக்குறியது என்று சொன்னார்.
இதற்கிடையே, இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து உலகநாடுகளிடத்தில் விளக்கி கூற அனைத்துக்கட்சியை சேர்ந்த 7 எம்பிக்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி. ரவிசங்கர் பிரசாத், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த சஞ்சய் குமார் ஷா, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பஜையந்த் பாண்டா, திமுகவை சேர்ந்த கனி மொழி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா புலே, காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் சிவசேனாவின் ஸ்ரீநாத் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மே 22ம் தேதி முதல் அமெரிக்கா, பிரிட்டன், கத்தார், யு.ஏ.ஈ, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Leave a Reply